அமைச்சர் கேஎன் நேருவுக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் 44 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க: பிரச்சாரத்தின் போது அதிமுக – பாஜக மோதல்… அண்ணாமலை வாகனத்தை சிறைபிடித்த அதிமுக வேட்பாளர்.. கோவையில் பரபரப்பு..!!
இந்த நிலையில், கோவை லட்சுமி மில்ஸ் அருகே உள்ள அவிநாசி ரவி என்பவரின் அலுவலகம், ராம் நகர் பி.எஸ்.கே அலுவலகம் மற்றும் அவிநாசியில் உள்ள குடிநீர் வாரிய ஒப்பந்ததாரர் வேலுமணி என்பவரின் அலுவலகம் என 3 இடங்களில் நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
சோதனை நடைபெறும் 3 பேரும் நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர்கள் என சொல்லப்படுகிறது. தமிழக அரசின் ஒப்பந்த பணிகளை இவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்று தொடங்கிய இந்த சோதனை 2வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.
மேலும் படிக்க: நள்ளிரவில் பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிம் திடீர் கைது… போலீஸ் வாகனத்தை மறித்து பாஜகவினர் தர்ணா..!!
அதேபோல, சென்னை இந்திரா நகரில் ராமச்சந்திரா கட்டுமான நிறுவனத்திலும், திருவான்மியூரில் அரசு ஒப்பந்ததாரர் ராமச்சந்திரன் வீட்டில் 2வது நாளாக ரெய்டு நடந்து வருகிறது. அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.