கிராம சபை கூட்டத்தில் குறைகளை கூறிய பெண்ணிடம் நீ ஓட்டு போட வேண்டாம் பொட்டியில் வைத்து பூட்டு வைத்து கொள் என பொருப்பில்லாமல் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், நன்மங்கலம் முதல் நிலை ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்ரமணியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவரும் கலந்து கொண்டு நன்மங்கலம் ஊராட்சியில் உள்ள பிரச்சனைகளை கூறி வந்தனர். பெண் ஒருவர் வடிகால்வசதி இல்லை, அதனை ஏற்படுத்தி தர வேண்டும், எங்களை பிரச்சனைகள் குறித்து ஊர் தலைவரோ, வார்டு உறுப்பினரோ வந்து கூட எட்டிப்பார்க்கவில்லை, ஓட்டு மட்டும் கேட்க வந்தார்கள் என அமைச்சரிடம் கேட்டார்.
அதற்கு அமைச்சர் ‘நீ ஓட்டெல்லாம் போட வேண்டாம், பொட்டியில் வைத்து பூட்டு போட்டு கொள்ளுங்கள்,’ என பதிலளித்தது சர்ச்சையாகி உள்ளது.
வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை, அதனை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லாத போது, அமைச்சர் ஒருவர் பொருப்பில்லாமல் பெண் ஒருவரிடம் ஓட்டு போட வேண்டாம் என கூறுவது கேள்வி கேட்போரை மிரட்டுவது போல் உள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மீண்டும் இணையும் அனுபமா – சமந்தா பிரவின் கந்த்ரேகுலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் "பரதா" திரைப்படத்தில் பிரபல நடிகை சமந்தா கேமியோ…
சிப்பிக்குள் முத்து படத்தில் அல்லு அர்ஜுன் நடிகர் கமல்ஹாசனுக்கு பேரனாக நடித்த ஒருவர் தற்போது பான் இந்திய ஹீரோவாக கலக்கி…
மர்மர் படம் – சர்ச்சையின் மையம் இந்தியாவின் முதல் Found Footage ஹாரர் படம் என விளம்பரப்படுத்தப்பட்ட மர்மர் திரைப்படம்…
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக சோதனை நடத்தினர். சென்னையில்…
மருத்துவமனை அறிக்கை – சிறுவனின் உடல்நிலை புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின்போது ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட…
நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாள சினிமா உலகில் குழந்தை நட்சத்திர அறிமுகமனார். இவரின் தாயார் மேனகா, தமிழ், தெலுங்கு, மலையாளம்…
This website uses cookies.