தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதா..? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் HMC மருத்துவமனையை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பால்வளதுறை அமைச்சர் சாமு நாசர், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
பின்னர், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் உலக அளவிலான திட்டமாக பாராட்டப்படுகிறது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 91 ஆயிரத்து 86 பேர் விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு உதவி இருக்கிறது. காப்பீடு திட்டத்தின்படிசுமார் 82 கோடி 37 லட்சம் விடுவிக்கப்பட்டது.
கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியாகும். அரசு மருத்துவமனையில் விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, 500 கலைஞர் உணவகம் விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தப்படும்.
பொது நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் அவசியமில்லை. தற்போது 40 சதவீதம் மருத்துவமனையில் கொரானோ நோயாளிகள் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கலாம் என்ற ஒன்றிய அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படும். தமிழகத்தில் 2000 முதல் 2500 பாதிப்புகள் உள்ளது.
BA4 BA5 உருமாற்றம் அடைந்த வைரஸ் உலகில் 110 நாடுகளை அச்சுறுத்திக் கொண்டு வருகிறது. வேகமாக பரவும் தன்மையுடையது என்பதால் தடுப்பூசி போடும் பணி மக்கள் இயக்கமாக மாறி உள்ளது. ஒரே நாளில் 17 லட்சத்தி 55 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சரியாக கொரோனா விதிகளை கடைபிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, என அவர் தெரிவித்தார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.