சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து அதை அரசியலாக்கி வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜக வின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட களப்பாறை – விருந்தோம்பி விளை – புளியற விளை இடையேயான பழுதடைந்த சாலையை சீரமைக்க மத்திய அரசின் நகர்புற திட்டத்தின் கீழ் ரூபாய் 35 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்று அந்தப் பணியினை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- இந்தியா போன்ற பல ஜாதி, பல மொழி, பல இன, பல சமூகங்களை சார்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில் எல்லோரையும் உள்ளடக்கிய அரசியல் தான் வெற்றி பெறும்.
இன்றைக்கு அவர்கள் செய்கின்ற ஒரு பெரும்பான்மை மக்களுடைய உணர்வுகளை தூண்டி சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து, அதை அரசியலாக்கி, வாக்காக மாற்ற எண்ணுகின்ற பாஜகவின் கனவு நிச்சயமாக தகர்ந்து போகும்.
அப்போ தெரியும் அண்ணாமலைக்கு யார் புலி..? யார் நாய்..? என்பது தெரியும், எனவும் பதிலளித்தார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அனிருத் பாடிய 'God Bless U’ நடிகர் அஜித் குமார் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திலிருந்து இரண்டாவது பாடலாக…
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் "சர்தார் 2" திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…
திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம்,தனது புதிய திரைப்படமான "வீர தீர சூரன்" வெளியானதை முன்னிட்டு,திண்டுக்கல்…
ஹீரோவாக நடிக்கிறார் VJ சித்து தற்போதைய சினிமா உலகில்யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.அந்த…
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
This website uses cookies.