பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கிய பின் செய்தியாளர்களை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- தமிழக முதல்வரின் வழிகாட்டுதலில் ஆவினில் இனி நல்லதே நடக்கும். ஆவின் மீது திட்டமிட்ட தாக்குதல் நடைபெறுகிறது. தமிழகத்தின் சிறந்த துறையாக பால்வளத்துறை திகழும். அதற்கு நான் பொறுப்பு, என்றும் கூறினார்.
மேலும் அவர் பேசும் போது, இன்றைய காலகட்டத்தில் சாதாரண விஷயத்தை கூட ஊதி பெரிதாக காட்ட முடியும். ஆவின் மீதான குற்றச்சாட்டை மிக தீவிரமாக விசாரித்து அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே, நல்லவற்றை பாராட்ட வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் விஷயத்தில் ஒளிவு, மறைவு இருக்கக் கூடாது என்பதால் தான் அவர்களது ஊதியத்தை வங்கிக் கணக்கில் கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
எங்களது பணி தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது. பனங்காட்டு நரி சலசலப்புகளுக்கு எல்லாம் அஞ்சாது. அமுல் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம், என்றார்.
பேடியின் போது நாகர்கோவில் மாநகராட்சி மேயரும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மகேஷ், கன்னியாகுமரி பேரூராட்சித் தலைவர் குமரி ஸ்டீபன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
ரசிகர்கள் செய்வது மிக தவறு தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இருப்பவர் எச் வினோத்,இவர் இயக்கிய…
கடலூரில், வேறு ஒருவரைக் காதலித்த நிலையில், திருமணம் முடித்த கணவருக்கு, மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.…
ட்ரெண்டிங் NO1-ல் குட் பேட் அக்லி ஆதிக் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீசர்…
சின்னத்திரை மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இவர் சக சீரியல் நடிகரை திருமணம்…
உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
This website uses cookies.