மயிலாடுதுறை ; ஆலங்குடி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் என்று கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி திருவெண்காட்டில் உள்ள அரசு பள்ளியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது ;- கடந்த 2016ம் ஆண்டு ஆலங்குடியில் நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பைப் பெற்றுத் தந்து அரசியலிலே அமைச்சராக பதவி உயர்வை பெறுவதற்க்கு காரணமாக இருந்தவர் முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின். இல்லையென்றால் என்னுடைய அரசியல் திசை மாறி சென்றிருக்கும்.
100 நாள் வேலை திட்டத்தில் நாட்கள் அதிகப்படுத்தப்படும். டெங்கு பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். திருவெண்காடு அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெருந்தோட்டம் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கலைஞர் உரிமைத்தொகை விடுபட்டவர்கள் மீண்டும் வார்டு உறுப்பினர்கள் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என தெரிவித்தார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.