உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து அமைச்சர் மூர்த்தி வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்கிமங்கலம் எல்.கே.பி.நகரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, சிக்கந்தர்சாவடி, வலையங்குளம் அரசுப்பள்ளிகளில் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியுடன் இணைந்து அரசு பள்ளிகளுக்கு நவீனப்படுத்தும் வகையில் எல்இடி திரைகளை வழங்கி ஸ்மார்ட் வகுப்பறைகளை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், இந்தியன் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- மதுரை திருப்பாலை பகுதியில் 19ம் தேதி முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக்கண்காட்சி தொடங்க உள்ளது. சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, துணைமுதல்வராக, முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும், எனக் கூறினார்.
உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராக வேண்டும் என அமைச்சர் சிவசங்கர் பேசியது குறித்த கேள்விக்கு, “உதயநிதி ஸ்டாலினின் திறமைக்கும், செயல்பாட்டுக்கும் ஏற்றார் போல முதல்வர் முடிவுசெய்து கொடுப்பார்,” என பேசினார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.