விழுப்புரம் ; கள்ளச்சாராய விவகாரம் காசோலை வழங்கச் சென்றபோது அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 12 குடும்பங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று காசோலைகளை வழங்கினர்.
அப்போது, உயிரிழந்த சங்கர் என்பவரது வீட்டிற்கு சென்று காசாலை வழங்கிய போது, அருகில் இருந்த மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி மற்றும் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் காசோலையை வழங்குங்கள் என கூறியதற்கு, “யோ பேசிட்டு தானே இருக்கேன்,” என்று ஒருமையில் பேசியது அங்கிருந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோன்று, மரக்காணம் செல்லன் தெருவில் உயிரிழந்த ஆபிரகாம் வீட்டிற்கு சென்று காசோலையை வழங்கிவிட்டு திரும்பிய போது, பொதுமக்கள் முற்றுகையிட்டு மரக்காணம் பகுதியில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தாததால் தான் இங்கு பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அவசர சிகிச்சை என்றாலும் 40 முதல் 50 கிலோமீட்டர் தாண்டி தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதாகக் கூறினர்.
எனவே அரசு மருத்துவமனை வேண்டும் என கேட்டதற்கு, ‘நீங்கள் என்ன எனக்கா ஓட்டா போட்டீர்கள்,’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதுவும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சரக DIG வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான…
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
This website uses cookies.