தமிழக பெண்களை தொடர்ந்து அவமதித்து வரும் அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீரபாண்டி கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, ஒன்றிய பெண் கவுன்சிலர் ஒருவரை ஒருமையில் பேசியதோடு, ‘உனக்கும், ஊராட்சித் தலைவருக்கும் உள்ள பிரச்னையை தனியாக பேசிக்கங்க’ என்று சொல்லியதுடன், ‘அப்படியா நீ… ஏய்…’ என்றெல்லாம் ஆணவத்தோடு, அவமரியாதையாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஏற்கனவே பெண்களை பஸ்சில், ‘ஓசியில் போறீங்க…’ என்று கேவலப்படுத்திய நிலையில், தற்போது ஒரு கவுன்சிலரை அவதுாறாக, அராஜகமாக பேசியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.பொன்முடி, தமிழ் பெண்களை தொடர்ந்து அவமதித்து, அராஜகமாக ஆதிக்க மனப்பான்மையோடு பேசி வருவதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.