அமைச்சர் PTR-ஐ ஓரங்கட்டுகிறாரா CM ஸ்டாலின்…? வெளியான பெயர் பட்டியல்… அதிர்ச்சியில் PTR ஆதரவாளர்கள்..!!

சென்னை : ஆடியோ விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை ஓரம்கட்டும் நடவடிக்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஈடுபட்டிருப்பது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அண்மையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்றை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் இணைந்து ஒரு வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க இருவரும் முயற்சிப்பதாக கூறியிருந்தார்.

ஆனால், இந்த ஆடியோ வெளியாகி சில தினங்களுக்குப் பிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆடியோ விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவரது அமைச்சர் பதவி பறிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் பழனிவேல் தியாராஜன் விளக்கமும் அளித்தார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, பிடிஆரை ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்த திமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் சிறப்பு பேச்சாளர்களின் பெயர் பட்டியல் கடந்த 3ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. அதில் மதுரை மாநகர் சார்பில் காமராஜபுரம் பகுதியில் ஆனந்தன், வில்லாபுரம் பகுதியில் ரகுபதி, சிம்மக்கல் பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திருப்பரங்குன்றம் வடக்கு ஒன்றியத்தில் வாசு முத்துசாமிஸ ஜீவா நகர் பகுதியில் சரவணன், பெத்தாணியாபுரம் பகுதியில் அப்துல்காதர், அண்ணாநகர் பகுதியில் முகவை க ராமர் உள்ளிட்டோர் பங்கேற்பர் என பெயர்களும் வெளியிடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் சிம்மக்கல் பகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஜெயரஞ்சன் அந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்பார் என போஸ்டர்களும், நிகழ்ச்சி நிரலும் அச்சிடப்பட்டுள்ளது. பிடிஆர் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பழனிவேல் தியாகராஜனை முதல்வரும் அமைச்சர்களும் பெரியதாக கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் கடந்த முறை சித்திரை திருவிழாவில் பிடிஆர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஆண்டு அவர் வரவில்லை. தற்போது, பேச்சாளர் பட்டியலில் இருந்து பிடிஆர் நீக்கப்பட்டிருப்பது உள்ளிட்ட செயல்கள், திமுக தலைமை அவரை ஓரங்கட்டுகிறதா..? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

21 minutes ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

53 minutes ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

1 hour ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

2 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாய்ந்த வழக்கு!  2 கோடி கொடுங்க- நீதிமன்றம் அதிரடி உத்தரவு?

இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…

3 hours ago

This website uses cookies.