தமிழ்நாடு அரசுதான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க கடந்த மூன்று தினங்களாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில், புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 10ம் வீதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை மக்கள் பெற்றுச் சென்றனர்.
அப்போது, இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி பேசுகையில்: திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அனைத்து மதத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் உடன் கூடிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து வழங்கியுள்ளார். திராவிட மாடல் கொள்கையை ஏற்காதவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள்.
திராவிட மாடல் ஆட்சி என்பது ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் பார்க்காமல் ஏழையாக இருப்பவர்களையும் பணக்காரர்களாக மாற்றுவதற்கான வழிகளை அரசு செய்து வருகிறது. மேடு பள்ளங்களை பார்க்காமல் பள்ளத்தில் உள்ளவர்களை மேட்டில் கொண்டு செல்லக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது என்று பேசினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில், “தமிழ்நாடு அரசுதான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றி என்று சொல்லி ஆளுநருடன் சண்டையிட தயாராக இல்லை, தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு ஆளுநர் அறிவித்துள்ளதற்கு வரவேற்புக் கூறியது.
அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா சொந்த காரணம் என்று கூறியுள்ளார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்று சென்னை சென்று பார்த்தால் தான் தெரியும். அதனால் அது குறித்து மற்ற விவரங்கள் தெரியாது, என்று தெரிவித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.