சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய வழக்கில் கடந்த வருடம் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பல முறை ஜாமீன் கேட்டும் மறுக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து அன்று இரவே ஜாமீனில் வெளியான செந்தில் பாலாஜிக்கு திமுகவினர், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
எந்த துறையை கவனித்தாரோ மீண்டும் அதே இலாக்கக்களை வழங்கினார் முதலமைச்ச் ஸ்டாலின். நேற்று ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க தலைமை செயலகம் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு பொறுப்புகளை ஏற்றார்.
நிபந்தனை ஜாமீன் பெற்று அமைச்சரான பின் முதன்முறையாக இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட ஆஜராகி விட்டு சென்றார்.
இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கு விசாரணைக்கு வந்த போது, அவர் அமைச்சராக இல்லை எனவே சாட்சியை கலைக்கமாட்டர் என்று தான் ஜாமீன் வழங்கப்பட்டது.
ஆனால் அவர் மீண்டும் அமைச்சராகிவிட்டதால் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் கோரினார்.
இதைக் கேட்ட நீதிபதி ஓகா, ஜாமீனை மறுபரிசீலானை செய்வதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்ய கூறியுள்ளார்.
இதனால் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளியான வேகத்திலேயே அமைச்சர் பதவி ஏற்றதால் அவரது ஜாமீனுக்கு சிக்கல் என கூறப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.