சென்னை ; தலைமறைவாக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் விரைவில் சரணடைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத்தின் அனுமதியின் பேரில் அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதில், அவர் கொடுத்த வாக்குமூலத்தை பதிவு செய்யப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை காவல் முடிந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 12ம் தேதி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, 4 முறை சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகாமல், தலைமறைவாக இருந்து வருகிறார். இதனால், அவரது மனைவிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரும் ஆஜராகாமல் இருந்து வருகிறார். மேலும், கரூரில் அவர்கள் கட்டி வரும் சொகுசு பங்களாவும் அமலாக்கத்துறையினரால் முடக்கப்பட்டது.
இந்த சூழலில், அசோக்குமாரை கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை கைது செய்ததாக சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகியது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகவில்லை என்று கூறினர். அதேவேளையில், அசோக்குமார் மத்திய உளவு துறையின் பிடியில் இருப்பதாகவும் தகவல் வெளியானாலும், இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி விரைவில் அமலாக்கத்துறையில் சரண் அடைய திட்டமிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அவர் எப்போது சரண் அடைவார் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சரண் அடைந்த பிறகு அமலாக்கத்துறையினர் தனது பாணியில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.