கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டிகளை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் சந்தேகத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவகங்கள், கல்குவாரி, அரசு ஒப்பந்ததாரர் உள்ளிட்டோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் லாரி மேட்டில் உள்ள வழக்கறிஞரும், பத்திர எழுத்தாளருமான செங்கோட்டையன் அலுவலகத்தில் நேற்று மதியம் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விடிய விடிய சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், இன்று காலை சோதனையிடையே சற்று முன்னர் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்புடன், இரண்டு அட்டை பெட்டிகளை காரில் வைத்து எடுத்துச் சென்றனர். அந்தப் பெட்டியில் இருப்பது என்ன..? என்பது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதும் சோதனையை வருமான வரித்துறையினர் தொடர்ந்து வருகின்றனர். பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படையினரும், உள்ளூர் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.