கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் வீட்டில் இரவு நேரத்தில் தொடரும் அமலாக்கத்துறையினர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரரும், டெக்ஸ்டைல் ஏற்றுமதியாளருமான அசோக்குமார் வீடு, கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள நிலையில் காலை முதல் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்திலும், பலத்த ராணுவ பாதுகாப்பு துணையுடன் சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
தற்பொழுது கரூரில் உள்ள ஜவஹர் பஜாரில் உள்ள பழனி முருகன் ஜூவல்லரி நகைக்கடை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள ராமவிலாஸ் உரிமையாளர் ரமேஷ்பாபு வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையானது இரவிலும் தொடர்ந்து வருகிறது.
கரூரில் தற்பொழுது வரை 8 இடங்களுக்கு மேல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும். தாய்மார்களுக்கும், ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலை உள்ளதாக எடப்பாடி…
சந்தோஷத்தில் பிரதீப் ரங்கநாதன் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கானுடனா சந்திப்பு குறித்து தன்னுடைய…
அஜித்தின் விடாமுயற்சி படம் சமீபத்தில் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. ஆனால் இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு…
முதல் முறையாக, ஜெயலலிதா உடன் நடிக்க இருந்த படம் குறித்து பேசுவதற்காக வேதா இல்லத்திற்கு வந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை:…
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
This website uses cookies.