டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ரூ.400 கோடி ஊழல்… செந்தில் பாலாஜிக்கு புது சிக்கல்… ஆதாரத்தை வெளியிட்டது அறப்போர் இயக்கம்..!!

சென்னை ; மின்சாரதுறையில் சுமார் 400 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு நடந்தது தொடர்பாக 288 பக்கங்கள் கொண்ட ஆதார அறிக்கையினை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் தமிழக மின்சார துறையில் அமைச்சராக பதவியேற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2 வருடங்களாக துறையின் மூலம் செய்த ஊழல்களின் ஆதாரங்களை அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் வெங்கடேசன் பத்திரிக்கையாளர்கள் முன் வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் ஊழல் தொடர்பான துல்லியமான ஆதாரங்களை வெளியிடுகிறோம். ஓர் ஒப்பந்தத்தில் 30-40 நபர்கள் 10க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் ஒரே ஒப்பந்த விலையை சமர்பித்து, 40 நபர்களும் சமமாய் பிரித்து கொண்டு கூட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் 45 ஆயிரம் டிரான்ஸ்பார்ம் ஒப்பந்தத்திற்கு 800 கோடி ரூபாய்க்கு கொடுக்க வேண்டிய ஒப்பந்தத்திற்கு 1100 கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டது. பலதரபட்ட ஆதாரங்களை சந்தை மதிப்பீட்டில் ஆராய்ந்து இந்த முடிவுகள் வெளியிடப்படுகிறது.
டெண்டர் குழுவில் இருக்கும் காசி டெண்டர் scrutinizing commiteeயில் இருக்கின்றனர். இந்த கூட்டு மோசடியை தடுக்காமல் அனைவரிடமும் ஒரே விலையை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

ராஜஸ்தானில் 7 லட்சத்து 87 ஆயிரம் ஒரு டிரான்ஸ்பார்மர் டெண்டர் விலையாக வெளியிட்டது. ஆனால், நம்முடைய அரசாங்கம் 12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு டிரான்ஸ்பார்மர் வழங்கியுள்ளது. ஒரு டிரான்ஸ்பார்மரில் சுமார் 4 கோடி ரூபாய் மோசடி செய்யபட்டு உள்ளது. இந்த ஒரு ஒப்பந்தத்தில் 34 கோடி ரூபாய் நஷ்டம் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. 250 kva டிரான்ஸ்பார்மர் 7,29,600 ரூபாய் என அனைத்து ஒப்பந்ததாரர்கள் விலை சமர்ப்பித்துள்ளனர்.

ராஜஸ்தான், பஞ்சாப் என பல மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்துள்ளோம். அவை அனைத்தும் குறைவாக தான் உள்ளது. டிரான்ஸ்பார்மர் ஒப்பந்தத்தில் மொத்தமாக 397 கோடி ரூபாய் அமைச்சர் செந்தில் பாலாஜி காசியின் மூலம் ஊழல் செய்துள்ளார். இதை போன்ற மிக பெரிய ஊழல் சிறு அதிகாரிகள் செய்ய முடியாது.

மின்சாரத் துறை அதிகாரி காசி மின்சார துறை அலுவலகத்திற்கு செல்வதில்லை. காலை முதல் மாலை வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்கு சென்று பணி செய்கிறார். ஒரு அடிமட்ட வேளையில் பணிபுரியும் அதிகாரி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டிற்க்கு செல்ல காரணம் என்ன..?

அமைச்சரின் உறவினர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு கடந்த மாதம் 30ம் தேதி நடந்து கொண்டிருந்த போதும் மின்சார துறை அதிகாரி காசி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இருந்தார். காசி கடந்த ஆட்சியில் 2010 செப்டம்பரில் சஸ்பென்ட் பண்ணப்பட்டார். மார்ச் 2020 இல் காசிக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டது. ஆனால் 2021 ஜூனில் TANTRANSCO பொருளாதார மேலாளராக நியமிக்கப்பட்டார். பணி நீக்கம் செய்யப்பட்டவர் எப்படி நியமிக்கப்பட்டார்?.

அதேபோல் ராஜேஷ் லகானி மீதும் ஊழலில் மிக பெரிய பங்கு உள்ளது. அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, காசி, ராஜேஷ் லகாணி, செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 1/2 லட்சம் கோடி முன்பே கடனில் இருக்கும் தமிழகம், நஸ்டம் ஆன 397 கோடி ரூபாய் இருந்திருந்தால் எத்தனையோ நல்ல திட்டங்களை தொடங்க முடிந்திருக்கும்.

இவ்வாறு ஏற்பாடும் நஸ்டதை மக்கள் மீது தான் இறக்கி வைக்கிறது அரசு. 30 ஒப்பந்ததாரர்களுக்கும் அமைச்சருக்கும் நேரடியாக தொடர்பு குறித்தான ஆதாரங்கள் இல்லை. தமிழகத்தில் டிரான்ஸ்பா்மர் quotation அதிகமாகவும் மற்ற மாநிலங்களில் குறைவாகவும் இருக்கும். சோதனைக்கு பிறகு தான் இந்த ஊழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கு தெரியவரும்.

முதல் கட்டமாக மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது , தன்னிச்சையான விசாரணை அமைப்பு இந்த விவகாரத்திற்கு இல்லை என்ற காரணத்தினால் இங்கு புகார் வழங்கப்பட்டது , லஞ்ச ஒழிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் மேலும் நீதி மன்றத்தை நாட வேண்டும். இன்னும் சில விசயங்களில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம்.

எனவே, செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் தகுந்த தண்டனை மோசடி செய்தவர்கள் மீது எடுக்க வேண்டும். அதே முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சியில் நடைபெற்ற ஊழலில் ஐஏஎஸ் கார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

எரிச்சல் ஆகுது, படம் முழுவதும் Instagram Reelsதான்- GBU பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்…

வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…

18 minutes ago

விஜய் பட வசனத்தை வைத்து அலறவிட்ட அஜித்.. GOOD BAD UGLY படத்தை கொண்டாடும் ரசிகர்கள்!!

அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…

51 minutes ago

GBU படத்தால தூங்க கூட முடியல- பேட்டியில் வெளிப்படையாக புலம்பிய Darkkey

மாஸ் ஓப்பனிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம் முழுவதும்…

1 hour ago

GBU படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி.. வீடியோ வைரல்!

நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. விடாமுயற்சிக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால்…

1 hour ago

காதலனை திருமணம் செய்த மகள் கௌரவக் கொலை.. 6 மாத கருவை கலைத்து, சிறையில் தள்ளிய பெற்றோர்!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் மிட்டபாளம் எஸ்.சி. காலனியைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞரை சந்திரகிரி மண்டலம் நரசிங்காபுரத்தை சேர்ந்த…

2 hours ago

நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…

ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…

17 hours ago

This website uses cookies.