மகளிருக்கான கட்டணமில்லா சேவைகளிலும் தனிகவனம்.. சிற்றுந்துகளுக்கும் சில உத்தரவுகள்…புதிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் அதிரடி

சென்னை : போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ எஸ்‌.எஸ்‌.சிவசங்கர்‌‌, தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து தலைமைச்‌ செயலகத்தில்‌ ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சராக திரு.எஸ்‌.எஸ்‌.சிவசங்கர்‌ நேற்றைய தினம்‌ பொறுப்பேற்றுக்‌ கொண்டார்கள்‌. அதனைத்‌ தொடர்ந்து, இன்றைய தினம்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌. தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்து போக்குவரத்துத்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ கே.கோபால்‌, அனைத்துப்‌ போக்குவரத்துக்‌ கழக மேலாண்‌ இயக்குநர்கள்‌, தனி அலுவலர்‌ மற்றும்‌ உயர்‌ அலுவலர்களுடன்‌ ஆலோசனை நடத்தினார்கள்‌.

இக்கூட்டத்தில்‌, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌, பொதுமக்கள்‌ பெரிதும்‌ சார்ந்துள்ள பொது போக்குவரத்தினை நிறைவாக அளித்திட வேண்டும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தியுள்ளார்கள்‌. எனவே. அதற்கு ஏற்ப அனைவரும்‌ செயல்பட வேண்டும்‌ என அறிவுறுத்தினார்கள்‌.

பின்னர்‌, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌, பேருந்து வசதியே இல்லாத கிராமங்களை கண்டறிந்து மிக விரைவாக போக்குவரத்து வசதியை பொதுமக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, சென்னை மாநகரில்‌ சிற்றுந்துகள்‌ இயக்கவேண்டிய இடங்களை கண்டறிந்து தேவைக்கு ஏற்ப சிற்றுந்துகள்‌ இயக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்கள்‌.

மேலும்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ நடைமுறைப்படுத்தப்பட்ட பொன்னான திட்டமான, மகளிர்‌ கட்டணமில்லா பயண சேவையில்‌ எவ்வித குறைபாடுகளும்‌, விமர்சனங்களும்‌ இல்லாமல்‌ இத்திட்டத்தை தனிக்கவனம்‌ செலுத்தி மிகச்‌ சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, பேருந்து இயக்கத்தில்‌ பயணக்‌ கட்டண வருவாயை தவிர பிற வழிகளில்‌, அதாவது விளம்பரம்‌, தூதஞ்சல்‌, பார்சல்‌ சேவை மற்றும்‌ போக்குவரத்துக்‌ கழகங்களுக்கு சொந்தமான காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அவற்றை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில்‌ மாற்றியமைத்து எவ்வாறு வருவாயினை பெருக்கிட வேண்டும்‌ என இனம்‌ கண்டு அவற்றை செயல்படுத்தி கழகத்தின்‌ வருவாயை மேம்படுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களின்‌ குறைகளை அவ்வப்போது கனிவுடன்‌ கேட்டறிந்து உடனுக்குடன்‌ தீர்வு காணப்பட வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்கள்‌.

அதனைத்‌ தொடர்ந்து. தகவல்‌ தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தி போக்குவரத்துத்‌ துறையின்‌ செயல்பாடுகளை மேம்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்‌ எனவும்‌, பேருந்துகளை நவீனமயமாக்கல்‌ மற்றும்‌ கிளை வளாகங்களின்‌ உட்கட்டமைப்பு மேம்பாடு குறித்த திட்டங்களை விரைந்து செயல்படுத்திட ஆக்கபூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்‌ எனவும்‌ அறிவுறுத்தினார்கள்‌.

போக்குவரத்துத்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ அவர்கள்‌, போக்குவரத்துத்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ மற்றும்‌ வரும்‌ காலங்களில்‌ செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள்‌ குறித்து விரிவாக போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ அவர்களிடம்‌ எடுத்துரைத்தார்கள்‌. குறிப்பாக. தகவல்‌ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பேருந்துகள்‌ இயக்கத்தை கண்காணித்து நெறிப்படுத்திட எடுக்கப்பட்டு வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்து விளக்கினார்‌.

தனி செயலியினை பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்தும்‌, வரும்‌ காலங்களில்‌ செயல்படுத்தப்பட உள்ளது குறித்தும்‌, மகளிரின்‌ பேருந்து பயணப்‌ பாதுகாப்பினைகண்காணித்திடும்‌ வகையில்‌, “நிர்பயா” நிதி மூலம்‌ மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழகப்‌ பேருந்துகள்‌ மற்றும்‌ பேருந்து நிலையங்களில்‌ கேமராக்கள்‌ பொருத்தும்‌ திட்டத்தின்‌ செயலாக்கம்‌ குறித்தும்‌ தெரிவித்தார்கள்‌.

மேலும்‌, போக்குவரத்துக்‌ கழகங்களின்‌ இயக்க செயல்பாடுகசை கண்காணிக்கும்‌ வகையில்‌, சிசிடிவி கேமராவை நிறுவிட நடவடிக்கை எடுப்பது குறித்து விவரித்தார்‌. அத்தோடு உலக வங்கி நிதி உதவியுடன்‌ மாநகர்‌ போக்குவரத்து கழகத்தில்‌ செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள்‌ குறித்தும்‌, தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம்‌ மூலமாக மாநகர்‌ போக்குவரத்துக்‌ கழக கிளை வளாகங்களின்‌ உட்கட்டமைப்பை மேம்படுத்தி, அதன்‌ மூலம்‌ இதர வருவாயை ஈட்டுவது குறித்து எடுக்கப்பட்டு வரும்‌ நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ விரிவாக எடுத்துரைத்தார்‌.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

9 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

9 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

9 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

11 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

12 hours ago

This website uses cookies.