செங்கல்பட்டில் பள்ளி நிகழ்ச்சியில் வாழ்த்துக்களை பிழையுடன் எழுதிய அமைச்சரின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டார்.
பின்னர், அவர் டிஜிட்டல் வகுப்பறையை திறந்து வைக்கும் விதமாக, அங்கு பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் போர்டில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் என எழுத முயன்றார். ஆனால், அவர் ‘வாழ்துகள்’ என பிழையுடன் எழுதினார்.
இதனை அங்கிருந்தவர்கள் சுட்டிக்காட்டினர். இதைத் தொடர்ந்து, தவறை உணர்ந்த அமைச்சர் அன்பரசன், அதனை அழித்து விட்டு மீண்டும் எழுதினார். அப்போது, வாழ்த்துக்கள் என்ற சொல்லில் மீண்டும் க்-ஐ விட்டுவிட்டு எழுத முயன்றார். பின்னர், அருகில் இருந்தவர்கள் தவறை சொன்னதால், அதனை அப்படியே சரிசெய்து எழுதிவிட்டு, ‘ஆள விடுங்கடா சாமி’ என்பதைப் போல அங்கிருந்து நன்றி சொல்லியடி கிளம்பினார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், எதிர்கட்சியினர் பல்வேறு கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இந்தி மொழியை கடுமையாக எதிர்க்கும் திமுக, தமிழ் மொழிக்காக குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சர் அன்பரசன் தமிழை பிழையுடன் எழுதிய சம்பவம் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
பெரிய திரையில் பிரபலமாக முதலில் கை கொடுப்பது சின்னத்திரைதான். சமீபகாலமாக இப்படி வந்தவர்கள் தான் இன்று சினிமாவை கோலோச்சி வருகின்றனர்.…
யுவன் ஷங்கர் ராஜா தான் காரணம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து பின்பு தனக்கென்று ஒரு தனி…
சினிமாவில் இருந்து விலக சூப்பர் ஸ்டார் முடிவு எடுத்துள்ளது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக…
BTS ஜின்னுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த பெண் ரசிகை தென்கொரியாவை சேர்ந்த பிரபல பி.டி.எஸ் இசைக்குழுவிற்கு உலகம் முழுவதும் ஏகப்பட்ட…
திண்டுக்கல் சிறுமலை செல்லும் வழியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அங்கு என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. திண்டுக்கல்: திண்டுக்கல்லில்…
வேலூரில், மாற்றுத்திறனாளிப் பெண்ணை உறவினரான இளைஞரே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர்: வேலூர் மாவட்டம்,…
This website uses cookies.