ED, CID, IT ரெய்டு லக்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம் என்றும், அதிமுகவை போல எங்களை கைக்குள் வைக்க முடியாது என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது :- நாங்கள் பாஜக ஏவி விடும் ED, CID, IT உள்ளிட்ட சோதனைக்கு அஞ்சமாட்டோம். நாங்கள் மிசாவையே பார்த்தவர்கள். அதிமுகவை கைக்குள் வைத்தது போல திமுகவை வைக்க நினைக்கின்றனர்.
ஆனால் அது ஒரு போதும் நடக்காது. அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை முதல் சோதனை நடத்தி அச்சுறுத்தி பார்க்கின்றனர். ஆனால் அது நடக்காது. தலைவர் பெங்களூரு சென்று உள்ளது பாஜகவை தூக்கி எறியத்தான், என்று பேசினார்.
அதன் பின்னர் திமுக மூத்த முன்னோடிகளுக்கு 10000 ரூபாய் அடங்கிய பொற்கிலியை வழங்கினார்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, வில்வநாதன், தேவராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, கதிர் ஆனந்த், மாவட்ட, ஒன்றிய, நகர ,பொறுப்பாளர்கள் என திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.