மதுரை ; மதுரையில் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.
மதுரை ஊமச்சிக்குளம் மற்றும் கோ.புதூர் பகுதிகளில் மதுரை சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பேசிய அவர், சு. வெங்கடேசன் பாராளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியதால், மறுபடியும் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வழங்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த 2019 தேர்தலில் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயித்த அவரை, இந்த முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
அதற்கு திமுக ஆட்சியின் சாதனைகளையும், மத்தியில் பிஜேபி ஆட்சியின் அவலங்களையும் ஒவ்வொருவரும் 10 பேர்க்காவது கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும், பிரதமர் மோடி, இன்னும் சிறிது நாட்களுக்குத்தான் பிரதமர் என தனது பேச்சில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டதோடு, கடந்த இரண்டு நாட்களாக அனைத்துப் பிரச்சார இடங்களிலும் ஒரே மாதிரி உரையைத்தான் தொடர்ந்து பேசி வருகிறார்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.