ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அடுத்த ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 219வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆடிப்பெருக்கு அனைவருக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார். 1801 , 1802 , 1803 ம் ஆண்டுகளில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் தீரன் சின்னமலை என்றும் சுதந்திர போராட்ட வீர்ரக்ளின் பெருமையை் நாம் பேசிக்கொண்டு இருக்க வேண்டும் என்றார்.
அவினாசி அத்திக்கடவு அதிமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்வதாகவும் , 99 % கொலைகளுக்கு காரணம் இருக்கும் , ஏன் இப்போது அதிகம் நடக்கிறது , காரணம் காவல்துறை கைகள் கட்டப்ப்பட்டு இருப்பதாகவும் , அடிப்படை காவல்துறையினர் வேலை செய்வதில்லை , காவல்நிலையத்தில் செய்ய வேண்டிய வேலை செய்யவில்லை என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று குற்றம்சாட்டினார்.
கர்நாடகா காங்கிரஸ் அரசிடம் கை நீட்டி பணம் வாங்கனாரா துரைமுருகன் என சந்தேகம் உள்ளதாகவும், ஏனென்றால் காங்கிரஸ் அரசு செய்யும் தவறுகளை ஒரு வார்த்தை கூட துரைமுருகன் பேசவில்லை என்பதால் பணம் வாங்கினாரா எனக்கு சந்தேகம் உள்ளது என்ற அண்ணாமலை மழை வந்ததால் காவிரி பிரச்சனை குறித்து இனி பேச மாட்டார்கள் என்றார்.
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.! நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம்,தங்களுடைய நிறுவன பெயரை தவறாக பயன்படுத்தி…
திமுக எம்எல்ஏக்களைப் போல் உதயநிதிக்கு ஜால்ரா போட மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை: மதுரை புறநகர்…
திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என பகிரங்கமாக கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.…
விக்ரம் முரட்டு கம்பேக் நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் தொடர்பான தகவல்…
சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய், 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.…
This website uses cookies.