வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மொத்தம் 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும், இதில் 90 ஆண்டுகால விமானச் சட்டத்தை மாற்றுவது உட்பட 6 மசோதாக்களை மத்திய அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மழைக்கால கூட்டத் தொடரின் பட்ஜெட் அமர்வில் நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கு மற்றும் ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்டபிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என சொல்லப்படுகிறது
மத்திய அரசு ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் இந்த அமர்வில் பெறவுள்ளதாக தெரிகிறது.
ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மதியம் 2:30 மணிக்கு பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் மொத்தம் ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.
1 நிதி மசோதா
2 பேரிடர் மேலாண்மை மசோதா: பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடு பற்றி தெளிவு பெற மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சட்டம்
3 பாரதிய வாயுயான் விதேயக்: 1934 ஆம் ஆண்டின் விமானச் சட்டத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்க முயல்கிறது.
4 கொதிகலன்கள் மசோதா
5 காபி மசோதா(விளம்பரம் மற்றும் மேம்பாடு)
6 ரப்பர் மசோதா(விளம்பரம் மற்றும் மேம்பாடு)
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024-இல் மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு,
கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.