இன்று கூடும் மழைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்; மெட்ரோதிட்டம்” வருமான வரி” போன்றவற்றில் வரப்போகும் மாறுதல்கள் என்ன?

வழக்கமாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால், மழைக்கால கூட்டத் தொடர், பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தொடர், இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மொத்தம் 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும், இதில் 90 ஆண்டுகால விமானச் சட்டத்தை மாற்றுவது உட்பட 6 மசோதாக்களை மத்திய அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத் தொடரின் பட்ஜெட் அமர்வில் நீட் தேர்வுத் தாள் கசிவு வழக்கு மற்றும் ரயில்வே பாதுகாப்பு உள்ளிட்டபிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என சொல்லப்படுகிறது

மத்திய அரசு ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பட்ஜெட்டுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் இந்த அமர்வில் பெறவுள்ளதாக தெரிகிறது.

ஏழாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மதியம் 2:30 மணிக்கு பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.

ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படும். மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் மொத்தம் ஆறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும்.

1 நிதி மசோதா
2 பேரிடர் மேலாண்மை மசோதா: பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடு பற்றி தெளிவு பெற மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த சட்டம்
3 பாரதிய வாயுயான் விதேயக்: 1934 ஆம் ஆண்டின் விமானச் சட்டத்திற்குப் பதிலாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்க முயல்கிறது.
4 கொதிகலன்கள் மசோதா
5 காபி மசோதா(விளம்பரம் மற்றும் மேம்பாடு)
6 ரப்பர் மசோதா(விளம்பரம் மற்றும் மேம்பாடு)

இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் 2024-இல் மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு,
கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Sudha

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

13 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

13 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

14 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

14 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

15 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

15 hours ago