தார்மீக வெற்றி காங்கிரஸ்க்குத்தான்.. அடக்கமாக இருக்க பாஜகவுக்கு பாடம் கொடுத்த மக்கள் : ப.சிதம்பரம் விமர்சனம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய ப.சிதம்பரம், “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறானது. கருத்துக் கணிப்பு அனைத்தையும் ஒரே இடத்தில் தயாரித்து ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் பாஜக 350 இடங்கள் பெறும் என ஒரே மாதிரி சொன்னது எப்படி? என கேள்வி எழுப்பிய அவர், இந்தியா கூட்டணி அகில இந்திய அளவில் 234 இடங்களை பெற்றது சாதாரண வெற்றி அல்ல, ஆனால் 400 இடங்கள் இலக்கு வைத்திருந்த பாஜக 240 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை இலக்கு வைத்த பாஜக மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. பாஜகவினர் களையிழந்து இருப்பதை பார்க்கிறேன்,பாஜகவுக்கு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர்.

நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்சனை? வேண்டுமானால் அவர்களும் கொண்டாடட்டுமே. யார் வேண்டாம் என்றது? என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: சீவலப்பேரி பாண்டி… ஆயுதங்களுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞர் : தட்டித் தூக்கிய போலீஸ்!

தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தார்மீக தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும். தேர்தலுக்கு பின்னர், பங்குச்சந்தையில் ஏற்பட்டது வளர்ச்சி இல்லை, வீக்கம் என்று கூறிய அவர், ஜவஹர்லால் நேருவுடன் தன்னை மோடி ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. அவ்வாறு ஒப்பிட்டுக்கொள்வதை காங்கிரஸ் நிராகரிக்கிறது.

மணிப்பூர் ஒரு ஆண்டுக்கு மேல் கலவரம் நடந்தது. பலர் அகதிகளாக உள்ளனர், 21-வது நூற்றாண்டில் மணிப்பூர்‌ வன்முறை மிகப்பெரிய நிகழ்வாகும். மணிப்பூருக்கு ஏன் இதுவரை பிரதமர் செல்லவில்லை. மின்னனு வாக்குப்பதிவு எந்திரம் வேண்டாம் என காங்கிரஸ் ஒருபோதும் சொல்லவில்லை.

வாக்குப்பதிவு எந்திரத்தில் முன்னேற்றம் வேண்டும் என்றே கூறுகிறோம். EVM இயந்திரங்களை நிராகரிக்கவில்லை, EVM இயந்திரங்களை மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு சிலர் EVM இயந்திரங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கலாம், அது கட்சியின் நிலைப்பாடு அல்ல என்று கூறிஉள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

2 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

2 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

2 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

2 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

3 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

3 hours ago

This website uses cookies.