புதுமணத் தம்பதிகளை ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழக வழக்கம்.அந்த வழக்கத்தை தெலுங்கில் ஆஷாட மாதத்தில் தெலுங்கர்கள் கையாளுகின்றனர்.
தற்போது ஆஷாட மாதம் முடிந்து விட்ட நிலையில் மாமியார் வீட்டில் இருந்த மனைவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்ல வந்த கணவனுக்கு அவருடைய மாமியார் நூறு வகை பலகாரங்களுடன் கூடிய விருந்து சாப்பாடு போட்டு அசத்தினார்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள தமரோட கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரிக்கும், காக்கிநாடாவை சேர்ந்த ரவி தேஜாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
கடந்த ஒரு மாதம் ஆஷாட மாதம் ஆகையால் புதுமண தம்பதிகள் சேர்ந்து இருக்க சம்பிரதாய ரீதியாக தடை உள்ளது.எனவே ரத்தினகுமாரி, ரவி தேஜா ஆகியோர் பிரிந்திருந்தனர்.
ஆஷாடம் முடிந்து தற்போது சிராவண மாதம் பிறந்துள்ளது.எனவே மனைவியை அழைத்து செல்வதற்காக ரவி தேஜா கிராமத்தில் இருக்கும் மாமியார் வீட்டிற்கு வந்தார்.
அவருக்கு அவருடைய மாமியார் நூறு வகையான பலகாரங்களுடன் கூடிய விருந்து சமைத்து பரிமாறி அசத்தினார்.
மாமியாரின் இந்த விருந்தால் மருமகன் மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.