பசுமை புரட்சியின் தந்தை எம்எஸ் சுவாமிநாதன்.. பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை நரசிம்மராவ்.. கவுரவிக்கும் பாரத ரத்னா!!
தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை எனவும் நரசிம்ம ராவ் அழைக்கப்படுகிறார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று நரசிம்ம ராவ் பிரதமரானார். 5 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார்.
இந்தியாவின் 7-வது பிரதமராக பதவி வகித்த சரண் சிங், உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். ஏழு மாதங்களே பிரதமராக சரண் சிங் பதவி வகித்தார். இந்தியாவில் குறுகிய காலம் மட்டுமே பிரதமராக இருந்ந்தவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். விவசாய தலைவராகவும் சரண் சிங் அறியப்பட்டார்.
மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் எனப்படும் எம் எஸ் சுவாமிநாதன் இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படுபவர். வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான இவர் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியாவிலும் உலக அளவிலும் புகழ்பெற்ற ஆய்வு நிலையங்களில் பேராசிரியர், ஆராய்ச்சி நிர்வாகி, தலைவர் ஆகிய பதவிகளை வகித்தார். மத்திய வேளாண்மைத் துறைச் செயலாளர், மத்திய திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவர். கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிகளுக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ‘வால்வோ’ விருது, ராமன் மகசேசே விருது உட்பட தேசிய மற்றும் சர்வதேச அளவில் 40-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றவர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.