டிரெண்டிங்

முருகன் மாநாட்டில் பல கோடி முறைகேடு… ரவுடி போல அமைச்சர் பேசியுள்ளார் : பாஜக பிரமுகர் குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் ஆயக்குடி பகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கைகாண அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் கலந்து கொண்டார்.

அப்போது வீடு வீடாக சென்று புதிய உறுப்பினர்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்து அவர்களுக்கு அட்டைகளை வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது :- பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்றதில் பல கோடி ரூபாய் நன்கொடையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டுள்ளது, அறநிலைத்துறையிலும் பணம் எடுத்துள்ளனர்.

இதில் பல கோடி ரூபாய் பணம் ஊழல் நடைபெற்றதாக கேள்வி எழுந்துள்ளது இதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்ற வெளிப்படையாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும், நடிகர் விஜய் திமுக வின் B டீம் ஆக செயல்பட்டு வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி அன்று திரைப்படத்தை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் சம்பாதிக்க தெரிந்த நடிகர் விஜய்க்கு, விநாயகர் சதுர்த்தி அன்று மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என தெரியவில்லையா? என பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பழனியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்று கேள்வி எழுப்பியுள்ளார்.

2026ல் கூட்டணி என்பது மத்திய தலைமை முடிவு செய்யும் எனவும் ,தமிழக பள்ளிகளில் மாணவர்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது வருத்தபடகூடியதாக உள்ளது.

இதில் சிறுவர்கள் தான் அதிகம் ஈடுபடுகின்றனர். நல்ல கல்வியை கல்வி துறை கொடுத்திருந்தால் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும், அதே போல கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்டமான திருச்சியிலும் கூட்டி பாலியல் தொல்லையும் தஞ்சாவூரிலும் கூட்டு பாலியல் தொல்லை கொடுரம் நடந்திருப்பது வேதனைக்குரிய விஷயம்.

கொல்கத்தாவை போல திமுக அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதிக்கு வரும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்றும் தெரிவித்துளார்.

சமீபத்தில் நடைபெற்ற கல்லூரியில் பாவ புண்ணியப் பற்றி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை மகாவிஷ்ணு உடனடியாக கைது செய்ய ப்படுவான் அவனை சும்மா விடமாட்டேன் என்று கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ரவுடி போல் பேட்டி அளிக்கிறார்.

தமிழகத்தில் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்களை ஈடுபடும் நான்கு பேரை சுட்டுக் கொண்டிருந்தால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்று இருக்காது என்றும் தெரிவித்தார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் இல்ல அஜித்.. தட்டித்தூக்கிய பிரதீப்.. மனோஜ் மறைவால் தள்ளிவைத்த அப்டேட்!

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தில் மமிதா பைஜு ஜோடியாக நடிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.…

2 minutes ago

பயிற்சி மருத்துவரை துணியால் மூடி.. சிவகங்கை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவரை துணியால் மூடி தாக்க முயன்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.…

58 minutes ago

இஸ்லாமை பின்பற்றும் ஒருவர்.. சபரிமலையில் நின்ற நடிகர்.. வெடித்த மத கருத்துகள்!

இஸ்லாமிய நம்பிக்கையைப் பின்பற்றும் ஒருவர், அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்தனைச் செய்ய வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் மோகன்லால் சபரிமலையில்…

2 hours ago

நீ மாசமா இருக்கியோ, நாசமா போவியோ : என் கூட ப***… மகனின் காதலியை தரக்குறைவாக பேசிய தந்தை!

மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் சாராநகர் அந்தோணியார் கோவில் தெருவை ஆரோக்கிய அமலா (29) மற்றும் இவரது உறவினரான மதுரை திருப்பரங்குன்றம்…

3 hours ago

மாலை 6 மணி வரை கெடு..உள்ளே புகுந்து முடிச்சிடுவேன் : போராட்டத்தில் பாஜக பிரமுகர் சர்ச்சை பேச்சு!

உண்ணாவிரத போராட்டத்தில் நம்பிக்கை இல்லை இன்று மாலை 6 மணி வரை நேரம் கொடுப்போம். நாளை உள்ளே புகுந்து முடித்து…

4 hours ago

திடீரென சட்டப்பேரவைக்குள் வந்த ரஜினி.. உறுப்பினர்கள் காரசார கணக்கு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு சரியாகத் தான் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி…

4 hours ago

This website uses cookies.