இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவால் காலமானார்.
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி பின்னணி பாடகியாக திரையுலகில் வலம் வந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இது குறித்து தகவல் அறிந்த இளையராஜாவின் குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் பாடி வந்த இவருக்கு, பாரதி படத்தில், “மயில்போல பொண்ணு ஒண்ணு,” என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது.
சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ள பவதாரணி, நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படங்களுக்கு பவதாரணி இசையமைத்தும் இருக்கிறார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.