இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவால் காலமானார்.
இசைஞானி இளையராஜாவின் மகளும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி பின்னணி பாடகியாக திரையுலகில் வலம் வந்தார். இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாக இலங்கையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இது குறித்து தகவல் அறிந்த இளையராஜாவின் குடும்பத்தினர் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். தொடர்ந்து, தனது தந்தை இளையராஜா மற்றும் சகோதரர் யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில் பாடி வந்த இவருக்கு, பாரதி படத்தில், “மயில்போல பொண்ணு ஒண்ணு,” என்ற பாடலை பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது.
சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ள பவதாரணி, நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் திரைப்படங்களுக்கு பவதாரணி இசையமைத்தும் இருக்கிறார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.