சென்னை பட்டினப்பாக்கத்தில் இருவர் போலீசாரிடம் இரவு நேரத்தில் தகராறு செய்தது மாமல்லபுரத்தில் காவலாளியை காரில் வந்தவர்கள் தாக்கியது என்ன ஒரே நாளில் நீங்கள் சென்னையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பட்டினப்பாக்கம் லூப் சாலையில், நேற்று (அக்.20) இரவு மயிலாப்பூர் போலீசார் வழக்கமான இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில், ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உள்ளே அமர்ந்திருந்ததை பார்த்துள்ளனர்.
அவர்கள் நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களை வெளியில் வரச் சொல்லி உள்ளனர். பின்னர் அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தி உள்ளனர். ஆனால், அதற்கு அவர்கள் அநாகரிகமான வார்த்தைகளால் போலீசாரை திட்டியும், வீடியோ எடுத்ததற்கு நன்றாக போஸ் கொடுத்த படியும் இருந்துள்ளனர்.
இதனை அடுத்து, இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோவில் உதயநிதியை இப்போது வரச் சொல்லட்டுமா என்ற வார்த்தையையும் அந்த நபர் பயன்படுத்தியிருந்தார். எனவே, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் கணவன் – மனைவி அல்ல என்பது உறுதியானது. பின்னர், மேலும் விசாரிக்கையில், தகராறு செய்த நபர் சந்திரமோகன் என்பதும், அவருடன் இருந்தது அவரது தோழி தனலட்சுமி என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகிய இருவர் மீதும் பணி செய்யவிடாமல் தடுத்து ஆபாசமாக பேசியதாக, மயிலாப்பூர் போலீசார் சிலம்பரசன் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், இருவர் மீதும் கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து, சந்திரமோகன் மற்றும் அவரது தோழி தனலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மற்றொரு சம்பவமும் சென்னையை ஒட்டிய மாமல்லபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
இதையும் படிங்க: திருமணத்திற்காக மின்சாரத்தை திருடிய விசிக நிர்வாகி : வாழ்த்திச் சென்ற அரசியல் கட்சி தலைவர்கள்!
இது தொடர்பாக வெளியான வீடியோவின்படி, மாமல்லபுரத்தில் நோ பார்க்கிங் ஏரியாவிற்குள் ஒரு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அங்கிருந்த காவலாளி இவ்வழியாகச் செல்ல முடியாது என கூறியுள்ளார். ஆனால் அவர்கள் அதனை மதிக்காமல் உள்ளே சென்றதாகவும் தெரிகிறது. இதனால் அந்த காவலாளி அவர்களை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து காரில் இருந்து இறங்கிய இரண்டு பெண்கள், அந்த காவலாளியை சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், காரில் இருந்து மற்றொருவரும் இறங்கி அவரை அடிக்கும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சென்னையை ஒட்டிய பகுதிகளில் ஒரே நாளில் நிகழ்ந்த இரு சம்பவங்களால் பரபரப்பு உண்டாகி உள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.