சென்னை : அண்ணா நகரில் இருவேறு இடங்களில் பெண்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஓட்டேரியை சேர்ந்த விஜயலட்சுமி அண்ணா நகர் அருகே வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மதியம் வீட்டு வேலை முடித்து விட்டு தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் இருவரில் பின்னால் அமர்ந்தவர் விஜயலட்சுமி அணிந்திருந்த 3 சவரன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.
பைக்கில் இருந்து இறங்கி விஜயலட்சுமியிடம் செயினை பறித்த போது அவர் தடுத்துள்ளார். ஆனால் அவரை கீழே தள்ளிய இளைஞர், வலுக்கட்டாயமாக அவரை தாக்கி செயின் பறித்து சென்றார்.
இது குறித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல அண்ணா நகரில் உள்ள மற்றொரு பகுதியில் இல்லத்தரசியான பிரபாவதி என்ற மூதாட்டி மளிகை கடைக்கு சென்று திரும்பிய போது மூதாட்யை தாக்கி 5 சவரன் நகை பைக்கில் வந்த நபர்கள் திருடி சென்றனர்.
இது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து அண்ணா நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.