கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் நடத்திய “மாற்றத்திற்கான இந்தியா” கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது.
இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் உரையாற்றினார்.
அப்போது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையால் கல்லூரி கல்வியில் சில சீர்திருத்தங்கள் வரவேற்கதக்க வகையில் உள்ளன.
ஆனால் பள்ளிக் கல்வியில் அது வெறும் காகித பயிற்சியாகவே இருக்கும் என்பதால் நடைமுறையில் சாத்தியம் இல்லை இதனால் பள்ளிக்கல்வியை குறித்து நான் கவலைப்படுகிறேன் என்றார்.
கல்லூரி கல்வியில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தங்கள் மாணவர்கள் பல படிப்புகளை எடுத்து படிக்க அனுமதிப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை.
30 கிலோமீட்டர் சுற்றளவு உள்ளவரை பள்ளிகள் வசதிகளை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க முடிவும் திருப்தியளிப்பதில்லை.
விளையாட்டு மைதானம் இல்லாத எந்த பள்ளியும் தங்கள் குழந்தைகளை தொலைதூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு தினமும் அழைத்துச் செல்வது சாத்தியம் இல்லாதது.
போதிய தரம் இல்லாத பள்ளிகள் செயல்பட அனுமதிப்பது வெறும் காகித பயிற்சி அவை அமையும். ஒரே பள்ளியில் இசை, கணிதம் கற்க ஒரே மாதிரியான கட்டணம் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்கும் வெவ்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் தேவை இதற்கு பணம் செலவாகும் அதை யார் செலுத்த போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
இந்த வசதிகளுக்கு மானியம் வழங்குவதற்கு அரசு நிதி உதவியை போதிய அளவிற்கு உயர்த்தப் போகிறதா? அல்லது பணக்காரர்களுக்கு மட்டும் கல்வியும் வாய்ப்பளிக்கிறதா என்பதை பிரதம தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
கல்வித் தரமானதாக இருக்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியும் கணிதம் மற்றும் இசை இரண்டையும் வழங்கினால் அற்புதமாக இருக்கும் ஆனால் இவை அனைத்திற்கும் போதிய வசதிகளை அரசு வழங்க வேண்டும் அப்போதுதான் இந்த திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சசி தெரு எழுதிய புதிய புத்தகம் எழுதப்பட்டது அதனை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன் வெளியிட பள்ளியை நிர்வாக அலுவலர் மற்றும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.