டிரெண்டிங்

தேசிய கல்வி கொள்கையால் மாணவர்களுக்கு எந்த பலனும் இல்லை ; சொல்கிறார் காங்., எம்பி சசிதரூர்!

கோவை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்கள் நடத்திய “மாற்றத்திற்கான இந்தியா” கருத்தரங்கின் நிறைவு விழா நடைபெற்றது.

இதில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று காங்கிரஸ் எம்பி சசிதரூர் உரையாற்றினார்.

அப்போது மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையால் கல்லூரி கல்வியில் சில சீர்திருத்தங்கள் வரவேற்கதக்க வகையில் உள்ளன.

ஆனால் பள்ளிக் கல்வியில் அது வெறும் காகித பயிற்சியாகவே இருக்கும் என்பதால் நடைமுறையில் சாத்தியம் இல்லை இதனால் பள்ளிக்கல்வியை குறித்து நான் கவலைப்படுகிறேன் என்றார்.

கல்லூரி கல்வியில் கொண்டுவரப்படும் புதிய சீர்திருத்தங்கள் மாணவர்கள் பல படிப்புகளை எடுத்து படிக்க அனுமதிப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை.

30 கிலோமீட்டர் சுற்றளவு உள்ளவரை பள்ளிகள் வசதிகளை பகிர்ந்து கொள்ள அனுமதிக்க முடிவும் திருப்தியளிப்பதில்லை.

விளையாட்டு மைதானம் இல்லாத எந்த பள்ளியும் தங்கள் குழந்தைகளை தொலைதூரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு தினமும் அழைத்துச் செல்வது சாத்தியம் இல்லாதது.

போதிய தரம் இல்லாத பள்ளிகள் செயல்பட அனுமதிப்பது வெறும் காகித பயிற்சி அவை அமையும். ஒரே பள்ளியில் இசை, கணிதம் கற்க ஒரே மாதிரியான கட்டணம் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் வெவ்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் தேவை இதற்கு பணம் செலவாகும் அதை யார் செலுத்த போகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.

இந்த வசதிகளுக்கு மானியம் வழங்குவதற்கு அரசு நிதி உதவியை போதிய அளவிற்கு உயர்த்தப் போகிறதா? அல்லது பணக்காரர்களுக்கு மட்டும் கல்வியும் வாய்ப்பளிக்கிறதா என்பதை பிரதம தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

கல்வித் தரமானதாக இருக்க வேண்டும் ஒவ்வொரு பள்ளியும் கணிதம் மற்றும் இசை இரண்டையும் வழங்கினால் அற்புதமாக இருக்கும் ஆனால் இவை அனைத்திற்கும் போதிய வசதிகளை அரசு வழங்க வேண்டும் அப்போதுதான் இந்த திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற முடியும் என்றார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்களிடையே கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சசி தெரு எழுதிய புதிய புத்தகம் எழுதப்பட்டது அதனை எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மணிமேகலை மோகன் வெளியிட பள்ளியை நிர்வாக அலுவலர் மற்றும் மாணவர்கள் பெற்றுக் கொண்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

13 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

14 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

14 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

14 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

14 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

14 hours ago

This website uses cookies.