அண்ணாமலைக்கு தேசிய அளவில் அங்கீகாரம்.. பாஜக உயர்மட்டக் குழு போட்ட பிளான்!!

தனது கட்சியில் இருக்கும் சிறந்த செயல்பாட்டாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் ஆளுநர், மத்திய அமைச்சர் மற்றும் பிற முக்கிய பதவிகளை வழங்கி வருகிறது பாஜக. சமீபத்தில் இல. கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போன்ற பாஜக கட்சியின் மூத்த தலைவர்களுக்கு ஆளுநர் பதவிகளை வழங்கியது. இந்த நிலையில், தமிழக பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை 73 இடங்களைக் கொண்ட ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

தமிழின் பெருமையை காக்க காசி மற்றும் சௌராஷ்டிர தமிழ் சங்கமங்களை ஏற்பாடு செய்து, புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது காவி கட்சி. தி.மு.க.வை எதிர்த்து நிற்க, சிவ பெருமானின் உறைவிடமான ராமேஸ்வரம் அமைந்துள்ள ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை களமிறக்க அதன் முக்கியத் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, பணியில் இருந்து விலகி காவி கட்சியில் சேர்ந்தார்.

அவர் தமிழகத்தில் கட்சியின் மாநிலத் தலைவராக ஆனதில் இருந்து, பாஜக மேலும் தீவிரமடைந்து, பல மக்கள் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பி, கட்சியை ஒரு துடிப்பான அமைப்பாக மாற்றியது என்றே சொல்லலாம். அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் மாநாட்டில் நடைபெறும் கொள்கை விவாதத்தில் பங்கேற்கும் நான்கு பேர் கொண்ட பாஜக பிரதிநிதிகளில் ஒருவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம்பெற்றுள்ளார்.

லண்டனில் தேசிய பாஜக ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிலும் அவர் பேச்சாளராக இருந்தார். ஜூலை 28 முதல் தமிழகம் முழுவதும் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரையை மேற்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ‘பாத யாத்திரை’யை தொடங்கி வைக்கிறார்.

தற்போது அரசியல் வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்த போது, “அண்ணாமலை ராஜ்யசபாவுக்கு முன்மொழியப்பட்டால், அது மாநிலத்தில் பா.ஜ.க.வின் வாய்ப்புக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும். பாஜக கட்சி இதுபற்றி ஆலோசனையில் இருக்கிறது” என்று தெரிவித்தனர். 2024 லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும், மாநிலத்திற்காக பணியாற்றுவதில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகவும் அண்ணாமலை முன்பு கூறியிருந்தார்.

இந்த ஆண்டு மே மாதம் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஆட்சி மாற்றத்துக்காக இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) அதிகாரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகம் வந்ததாக கூறினார். “2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. 2024 தேர்தலில் கோவை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் போட்டியிட பல திறமையான தலைவர்கள் கட்சியில் உள்ளனர். ஒரு மாநிலத் தலைவராக, எங்கள் வேட்பாளர்கள் இங்கு நடைபெறும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதே எனது பணி.

ஒரு காரியகர்த்தா என்ற முறையில், 2024 தேர்தலில் ஒரு கேடராக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று டெல்லிக்கும் (கட்சி தலைமை அலுவலகம்) தெரிவித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

இந்த நிலையில் அவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்குமா? என்றும், அதுமட்டுமின்றி தமிழக பாஜகவில் சுறுசுறுப்பாக இயங்கிவரும் அண்ணாமலைக்கு மாற்றாக தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Share
Published by
Updatenews Udayachandran

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

6 hours ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

6 hours ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

7 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

7 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

8 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

8 hours ago

This website uses cookies.