வாக்களிக்க பூத் ஸ்லிப் தேவையா? என்னனென் ஆவணங்கள் பயன்படுத்தலாம்? சத்யபிரதா சாகு விளக்கம்!

வாக்களிக்க பூத் ஸ்லிப் தேவையா? என்னனென் ஆவணங்கள் பயன்படுத்தலாம்? சத்யபிரதா சாகு விளக்கம்!

நாட்டின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் மக்களவை தேர்தல் நாளை முதல் கட்டமாக தொடங்குகிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் நாளை ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்வு பெற்றது.

இதனால் பிரச்சாரம் நிறைவுக்கு பிறகு பின்பற்றவேண்டிய தேர்தல் விதிமுறைகளும் அமலுக்கு வந்தது. அதன்படி, நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர் அடைய அட்டை இல்லாதவர்கள் பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இதனிடையே மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பும் விநியோகம் செய்ய்யப்பட்டது. இருப்பினும் சில பகுதிகளில் பூத் சிலிப் வழங்கவில்லை என புகாரும் எழுந்தது. இதனால் பூத் சிலிப் இல்லையென்றால் வாக்களிக்க முடியுமா? என்று மக்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

மேலும் படிக்க: தீய திராவிடிய சிந்தனை எப்படினு பாருங்க.. முகமூடி அணிந்து குறைக்கும் ந*** யார்? கஸ்தூரி விளாசல்!

இந்த நிலையில் வாக்களிக்க பூத் சிலிப் கட்டாயம் தேவையா? என்பது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் அதிகாரி கூறியதாவது, தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 90% பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் சில பகுதிகளில் வீட்டில் யாரும் இல்லாததால் பூத் சிலிப் வழங்கப்பட்டிருக்காது. இதனால் பூத் சிலிப் இல்லாததால் வாக்களிக்க முடியாது என நினைக்கவேண்டாம். தேர்தல் ஆணையத்தின் voter helpline என்ற மொபைல் செயலி மூலம் பூத் சிலிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அந்த செயலில் உள்ளே சென்று உங்களது வோட்டர் ஐடி கார்டு நம்பர் பதிவிட்டு பூத் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

எனவே பூத் சிலிப் என்பது கட்டாயம் இல்லை. அதிகாரப்பூர்வ 13 அடைய அட்டைகளில் எதாவது ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் பூத் சிலிப் இல்லையென்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் எனவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கமளித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீர தீர சூரன் நான் இல்லை, நீங்கதான்- திண்டுக்கலில் சீயான் விக்ரம் செய்த சம்பவம்…

கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

4 minutes ago

காரை துரத்திய பைக்.. கல் வீசி கண்ணாடி உடைப்பு : NH சாலையில் இளைஞர்கள் நடத்திய போதை ஆட்டம்!

காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…

28 minutes ago

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

38 minutes ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

2 hours ago

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

3 hours ago

This website uses cookies.