அரியலூர் : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் முதல் பலி ஆவார். இவரது தற்கொலைக்கு பிறகுதான் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கையில் எடுத்தனர். தற்போது வரையிலும் நீட் தேர்வு ரத்து குறித்த வாக்குறுதி அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்து வருகிறது. ஆனால், இப்போதும் நீட் விவகாரம் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார் நகரில் தனது கணவர் அருண்குமாருடன் வசித்து வருபவர் வசந்தி (39). அதே பகுதியில்தான் அனிதாவின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். அந்தத் தெருவில் அனிதாவின் சகோதரர் அருண்குமார், பைக்கில் வேகமாகவும், தாறுமாறாகவும் வருவதாகவும் கூறப்படுகிறது. அப்போது, வசந்தியிடம் வம்பிழுத்ததாகவும் தெரிகிறது.
பின்னர், இது தொடர்பாக வசந்தி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் அருண்குமாரிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, கணவன், மனைவி இருவரையும் அருண்குமார் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவின் அடுத்த படம்தான் DRAGON. பிரதீப் ரங்நாதன் நடிக்க, ஏஜிஎஸ் நிறுவனம்…
கரூர் அருகே 10ம் வகுப்பு மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 12ம் வகுப்பு மாணவர் பிடிபட்ட நிலையில், மேலும்…
தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…
வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…
சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…
This website uses cookies.