அரியலூர் : நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தான், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தின் முதல் பலி ஆவார். இவரது தற்கொலைக்கு பிறகுதான் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தை அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கையில் எடுத்தனர். தற்போது வரையிலும் நீட் தேர்வு ரத்து குறித்த வாக்குறுதி அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் இடம்பிடித்து வருகிறது. ஆனால், இப்போதும் நீட் விவகாரம் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அனிதாவின் சகோதரர் பெண் வன்கொடுமை புகாரில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செந்துறை அருகே உள்ள குழுமூர் பெரியார் நகரில் தனது கணவர் அருண்குமாருடன் வசித்து வருபவர் வசந்தி (39). அதே பகுதியில்தான் அனிதாவின் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். அந்தத் தெருவில் அனிதாவின் சகோதரர் அருண்குமார், பைக்கில் வேகமாகவும், தாறுமாறாகவும் வருவதாகவும் கூறப்படுகிறது. அப்போது, வசந்தியிடம் வம்பிழுத்ததாகவும் தெரிகிறது.
பின்னர், இது தொடர்பாக வசந்தி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர் அருண்குமாரிடம் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, கணவன், மனைவி இருவரையும் அருண்குமார் அடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வசந்தி கொடுத்த புகாரின் பேரில் பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்து செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.