மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது.
இந்த புகாா்களை அத்தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.இந்த நிலையில் நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.
நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதல் நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வந்த நிலையில் தற்போது வட மாநிலங்களிலும் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையில் நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து மறு தேர்வு நடத்துமாறு நீட் மாணவர்களும் பொதுமக்களும் வட மாநிலங்களில் போராட்டம் நடந்தத் தொடங்கியுள்ளனர்.
வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன் ஏராளமான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ராஸ்ஜ்தான் கோட்டா நகரிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
கோவை மாநகராட்சிக்கு சொந்தமான வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கு உள்ளது. இந்த குப்பை கிடங்கில் 253…
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
This website uses cookies.