நீட் தேர்வின் காரணமாகத் தான் சாமாணியர்களின் குடும்பங்களில் இருந்தும் மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தேர்வாகிறார்கள் என சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மாணவர்களிடையே பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எம். பி நிதியில் கட்டப்பட்ட புதிய கலையரங்கக் கட்டிடத் திறப்பு விழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்ட சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் கலையரங்கத்தை திறந்து வைத்த பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது பேசிய அவர், தேர்வு, டியூசன் உள்ளிட்ட பாட முறைகள் மீது தனக்கு ஒரு வெறுப்பு இருப்பதாகவும் இது குறித்து தான் மேடையிலேயே பேசி விடுவதால் அடுத்த முறை தன்னை பள்ளி விழாக்களுக்கே யாரும் அழைப்பதில்லை எனவும், மாணவர்கள் தேர்வு குறித்தெல்லாம் கவலைப் பட வேண்டாம் என கலகலப்பாக பேசினார்.
எம்பியின் இந்த பேச்சிற்கு மாணவர்கள் மத்தியில் கடுமையான வரவேற்பு இருந்தது. கரகோஷங்கள் எழுப்பி உற்சாகத்தை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
மேலும் பேசிய அவர், நீட் தேர்வின் காரணமாகத்தான் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த வசீகரன் என்ற மாணவர் மருத்துவம் படிக்கச் சென்றுள்ளார்.
நீட் தேர்விற்கு முன்னர் சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் மருத்துவப் படிப்பிற்குச் சென்றதில்லை, நீட் தேர்வு நடத்தப்பட்ட பிறகு தான் சாமாணிய மாணவர்களும் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி வருகின்றனர்.
நீட் குறித்து மேடைகளில் பேசுபவர்களுக்கு நீட் தேர்வு குறித்த புரிதல் இல்லை எனவும் விமர்சித்தார்.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.