2019 நீட் தேர்வு முறைகேடு; சிபிசிஐடி வழக்கை சரியாக கையாளவில்லை; மதுரை கிளை நீதிபதி புகழேந்தி காட்டம்

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் பலர் சேர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.தேனி, அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த சென்னை மாணவர் உதீப் சூர்யா என்பவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்ற போது இந்த ஆள் மாறாட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. கல்கத்தா,ராஜஸ்தான் போன்ற இடங்களிலும் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவங்கள் நடைபெற்றது

இதைப் போன்ற சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த வழக்கை தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது மாநில அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஊடகங்கள் சரியான தகவலை வழங்குவதில்லை எனவும் கன்னா பின்னாவென்று தகவல்களை வெளியிடுகின்றன எனவும் தெரிவித்தார்.அதற்கு பதில் அளித்த நீதிபதி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிடுகிறது என்றார்.மாணவர்களின் அனைத்து அணிகலன்களையும் கழற்றி சோதனை செய்யும் நீங்கள் போலியாக தேர்வு எழுதிய மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கேள்வியை முன் வைத்தார்

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடி முறையாக கையாளவில்லை எனவே விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்றங்கள் என அறிவுறுத்தினார்.மேலும் சிபிசிஐடி கேட்கும் வழக்கு குறித்த ஆவணங்களை தேசிய தேர்வு முகமை 19ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவு பிறப்பித்தார்.

Sudha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

11 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.