பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக, நித்யானந்தா மீது அவருடைய முன்னாள் உதவியாளர் லெனின் கருப்பன் 2010-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் 2010ம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து நித்யானந்தா விலக்கு பெற்றிருந்தார்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு, நித்யானந்தா ஒத்துழைப்பு தரவில்லை. எனவே அவர் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு குறித்த விசாரணையின் போது, ‘நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பியோடி விட்டார் என’, கர்நாடக சி.ஐ.டி., போலீசார் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தனர்.
இதனால், அவர் எங்கு உள்ளார் என்று கண்டறிந்து, அவரை கைது செய்து, ராம்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த 2019ல் உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 2020ம் ஆண்டு நடந்த விசாரணையில் கர்நாடக உயர்நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு ராம்நகர் மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில் ராம்நகர் நீதிமன்றம் நித்யானந்தாவிற்கு ஜாமினில் வெளிவரமுடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக வரைபடத்தில் இல்லாத ‘கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக கூறிக்கொண்டு அடிக்கடி வீடியோ வெளியிட்டுவருகிறார் நித்யானந்தா. இந்நிலையில் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளதால் கோர்ட் உத்தரவையடுத்து நித்தியை பிடிக்கும் பணியில் போலீசார் இறங்கியுள்ளனார்.
பராசக்தி ஹீரோ சிவகார்த்திகேயன் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் “பராசக்தி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் சில…
ஸ்ரீக்கு என்ன ஆச்சு? சமீப நாட்களாக நடிகர் ஸ்ரீ குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகர் ஸ்ரீ …
பிரதமர் மோடியை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென புகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளம் ஒன்றுக்கு பிரமேலதா…
சர்ச்சையை கிளப்பிய வீடியோ “சிறகடிக்க ஆசை” என்ற பிரபலமான டிவி தொடரில் வித்யா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமாக…
நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நாகசைதன்யா பின்னாளில் பிரிந்தனர். அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், நாகர்ஜூனாவின்…
துருவ் விக்ரம் - அனுபமா ஜோடி… மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் “பைசன்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம்…
This website uses cookies.