ராகுல்காந்திக்கு அடுத்த நெருக்கடி : பாரத் யாத்திரைக்கு தடை? பாஜக கொடுத்த தலைவலி..!!

ராகுல்காந்திக்கு அடுத்த நெருக்கடி : பாரத் யாத்திரைக்கு தடை? பாஜக கொடுத்த தலைவலி..!!

வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி ராகுல் காந்தி 2வது கட்டமாக ‛பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை தொடங்க உள்ளார். இந்த யாத்திரை என்பது வரும் 14 ம் தேதி மணிப்பூரில் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த யாத்திரை மொத்தம் 6,713 கிலோமீட்டர் தொலைவு நடைபெற உள்ளது. மொத்தம் 66 நாட்களில் ராகுல் காந்தி நடைப்பயணம் செய்து இந்த தொலைவை கடக்க உள்ளார். இந்த யாத்திரை என்பது மொத்தம் 110 மாவட்டங்களில் 337 சட்டசபை தொகுதிகள், 100 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக நடைபெற உள்ளது. மார்ச் மாதம் 20ம் தேதி இந்த யாத்திரையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த யாத்திரை என்பது வரும் 14ம் தேதி மணிப்பூர் மாநிலம் ஹட்டா கங்ஜெய்புங்கில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் மணிப்பூரில் இந்த யாத்திரையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அங்குள்ள அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. காங்கிரஸ் கட்சியின் அனுமதி கோரிய கடிதம் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதாவது மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. குக்கி-மைத்தேயி இன மக்கள் இடையேயான மோதல், வன்முறை என்பது இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் மணிப்பூரின் மோரே பகுதியில் புதிதாக வன்முறை நடந்தது. கடும் துப்பாக்கிச்சண்டை என்பது நடந்தது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

இதனை காரணம் காட்டி காங்கிரஸ் கட்சியின் யாத்திரைக்கு இன்னும் அனுமதி என்பது வழங்கப்படவில்லை. இதுபற்றி மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பீரன் சிங் கூறுகையில், ‛‛மாநிலத்தில் காவல்துறையின் செயல்பாட்டால் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலனை செய் வருகிறோம். இதுதொடர்பாக பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து தகவல்களை பெற்று வருகிறோம். அவர்களிடம் இருந்து அறிக்கை பெற்ற பின் உறுதியான முடிவை எடுப்போம்” என்றார்.

இதற்கு தற்போது காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் பொது செயலாளர் கே.சி. வேணுகோபால், வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களின் காயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அங்கிருந்து நீதி யாத்திரை தொடங்கப்பட உள்ளது.

இதற்கு அனுமதி அளிக்க முடியாது என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. அனுமதி கோரிய காங்கிரசின் விண்ணப்பம் ஒப்புதல் கேட்டு டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசியல் கட்சி கூட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தான் மத்திய அரசின் வேலையா?” என்று கேள்வி எழுப்பினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக.. பொன்.ரா விளாசல்!

தமிழக மக்களுக்கு இதுமாதிரியான துரோகங்களை செய்துவிட்டு மும்மொழிக் கொள்கை பற்றி முதல்வர் பேசுவதாக பொ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்: கோவை மாவட்டம்,…

35 minutes ago

கணவருடன் கவர்ச்சி குத்தாட்டம்… நைட் பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ்!

வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மேனகாவின் மகளாக மலையாள சினிமாவில் நுழைந்த கீர்த்தி சுரேஷ்க்கு தமிழ்,…

42 minutes ago

மீண்டும் தலைதூக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில், இன்று (பிப்.24) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 55 ரூபாய்க்கு…

1 hour ago

மொத்தமும் போச்சு.. சைபர் கிரைமில் சிக்கிய ஜீ தமிழ் சீரியல் நடிகர்..!!

ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…

3 hours ago

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

16 hours ago

This website uses cookies.