பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் நிதிஷ்குமார் அரசு, பெரும்பான்மை எம்எல்ஏ.,க்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்றது.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறித்துக் கொண்ட முதலமைச்சர் நிதிஷ்குமார், பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோர்த்தார். பின்னர், நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். ராஷ்டிரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், புதிய அரசின் மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பு இன்று நடைபெற்றது. மொத்தம் 243 எம்எல்ஏ.,க்களை கொண்ட பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏ.,க்கள் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில், 160க்கும் மேற்பட்டோர் நிதிஷ்குமாருக்கு ஆதரவு அளித்தனர்.
இதன் மூலம், ஏறக்குறைய வெற்றி உறுதியானது. இதனிடையே, சபாநாயகரான பா.ஜ.க,வின் விஜயகுமார் சின்ஹா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, துணை சபாநாயகர் மகேஷ்வர் ஹசாரி முன்னிலையில் நடந்த ஓட்டெடுப்பு நடந்தது.
இதைத் தொடர்ந்து, பேசிய முதலமைச்சர் நிதிஷ்குமார், பீகாரின் வளர்ச்சிக்காக நாங்கள் (ஆர்ஜேடி மற்றும் ஜேடியு) இணைந்து செயல்பட உறுதிமொழி எடுத்துள்ளோம். 2024 தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். அவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளனர், என தெரிவித்தார்.
சென்னையில், இன்று (மார்ச் 12) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65…
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப் படமாக டிராகன் படம் உருவாகியுள்ளது,அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்…
காசு மழையில் டிராகன் கடந்த மாதம் பிப்ரவரி 21 ஆம் தேதி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்…
டி.ராஜேந்திரனின் பரிதாப நிலை.! தமிழ் சினிமாவில் நடிகர்,இயக்குநர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர்,விநியோகஸ்தர்,அரசியல் வாதி என பல்வேறு திறமைகளை கையில் வைத்திருப்பவர் டி.ராஜேந்திரர். இதையும்…
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர் (வயது 35). இவர் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.…
பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்.! நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
This website uses cookies.