என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!

என்எல்சி விவகாரம்… விவசாயிகளுக்கு க்ரீன் சிக்னல் : பரபரப்பு உத்தரவு போட்ட நீதிமன்றம்!!

என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட விவகாரத்தில், கால்வாய் தோண்டும் பணிக்கு தடை விதிக்கவும், நிலத்தை ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்து உயர்நீதிமதின்றதில் தொடரப்பட்ட வழக்கில், இன்று அவசர வழக்காக விசாரிக்கப்பட்டதில், மனுதாரர் முருகன் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

நிலம் கையகப்படுத்தப்பட்டு இவ்வளவு ஆண்டுகளாகி, தற்போது அறுவடைக்கு காத்திருக்கும் சமயத்தில் கால்வாய் தோண்டுவது குறித்து இதற்கு தடைவிதிக்க கோரி வலியுறுத்தப்பட்டது. இதற்கு நீதிபதி, பயிர்களுக்கான இழப்பீடு குறித்து பிரமானபத்திரம் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கும், என்எல்சிக்கும் உத்தரவிட்டார்.

மேலும் தமிழக அரசு தரப்பில் செப்டம்பர்-15க்குள் அறுவடையை முடித்து நிலத்தை திருப்பித்தரவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரருக்கு நீதிபதி, அறுவடை முடிந்த பின் நிலத்தை திருப்பித்தருவோம் என உத்திரவாதப் பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபின்பு, நீதிபதி கையகப்படுத்தப்பட்ட பின்பு உங்களுக்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பு வேலி கூட இதுவரை ஏன் அமைக்கவில்லை என என்எல்சி தரப்பிடம் கேள்வியெழுப்பினார்.
நிலத்தை சேதப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை என்றும், கால்வாய் தோண்டாவிட்டால் என்எல்சியிலிருந்து தண்ணீர் போக வழியில்லாமல் வெள்ளம் பாதிப்பு மற்றும் மின் உற்பத்தி போன்ற பாதிப்பும் ஏற்பட்டுவிடும் என என்எல்சி தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இந்த வழக்கில் மனுதாரர் பாதிக்கப்பட்ட விவசாயி முருகன் தரப்பில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது, இதனால் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் வழக்கின் தீர்ப்பு பொருந்தாது என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது, வழக்கு நாளை மறுதினம் ஒத்திவைக்கப்பட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

3 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

4 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

4 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

5 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

5 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

5 hours ago

This website uses cookies.