நீங்க தலைவராக இருந்த போது கட்சியில் சேர யாருமே வரலை : தமிழிசை மீது திருச்சி சூர்யா அட்டாக்!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2024, 2:18 pm
sur
Quick Share

ஆங்கில நாளிதழக்கு அளித்த பேட்டியில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்றதில் இருந்து பாஜகவில் ரவுடிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக தமிழிசை சவுந்திரராஜன் கூறியிருந்தார். இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதுகுறித்து திருச்சி சிவா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: அக்கா வணக்கம் @DrTamilisai4BJP தேசியத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற பாடம் எடுக்கக்கூடிய தாங்கள் ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் பொது ஊடகங்களில் இப்படி கருத்து பதிவிடுவது சரியா? குற்ற பின்னணி உள்ளவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்க்கப்பட்டது என்பது தங்களுடைய பரிந்துரையில் மாநிலத் தலைவர் ஆக்கப்பட்ட எல்.முருகன் காலகட்டத்தில்தான் வேண்டுமென்றால் நான் பட்டியல் தருகிறேன்.

கட்சியின் வளர்ச்சியையும் தனி நபருக்கு கிடைக்கும் புகழையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்புகிறீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது தாங்கள் மாநில தலைவராக இருந்தபோது கட்சியில் சேர்வதற்கு கூட ஆட்கள் முன்வரவில்லை என்பதே நிதர்சனம்.
அதிமுக கூட்டணி இருந்திருந்தால் அதிகம் இடங்கள் ஜெயித்திருக்கும் என்று தேசியத்தின் முடிவுக்கு எதிரான உங்கள் கருத்து கட்சி கட்டுப்பாடா?

பாஜகவுக்குள் தேர்தல் நிதிகள் சரியாக போய் சேரவில்லை என்ற பொதுத்தளத்தில் நீங்கள் பேசிய பிறகுதான் இன்று தமிழ்நாடு முழுவதும் அது பேசும் பொருளாக ஆகியது இது கட்சி கட்டுப்பாடா?
இப்படி எல்லாம் கட்டுப்படாத முன்னால் மாநிலத் தலைவரின் கருத்திற்கு அமைதி காக்கும் தேசியம் அதற்கு எதிர் வினையாற்றும் எங்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதை சந்திக்க தயாராக உள்ளோம். பதவிக்காக நாங்கள் இந்த கட்சியில் இல்லை அண்ணனின் அன்புக்காக மட்டுமே உள்ளோம். இவ்வாறு திருச்சி சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.

Views: - 133

0

0