மகளிர் உரிமைத் திட்டத்தில் ஒரு பெண்கள் கூட விடுபடக்கூடாது : அமைச்சர் உதயநிதி பேச்சு!!
நெல்லையில், பல்வேறு அரசுத்திட்டங்களின் கீழ் 8,844 பயனாளிகளுக்கு சுமார் ₹157.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சத்து 58 ஆயிரம் மகளிருக்கும் இந்த உரிமை தொகை திட்டம் இரண்டாவது முறையாக வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மகளிர் மட்டுமன்றி திருங்கையர், மாற்று திறனாளிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். நான் சட்டமன்றத்தில் சொன்னது போல தகுதியுள்ள ஒரு மகளிர் கூட விடுபட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் இந்த அரசு செயல்பாட்டுக்கு கொண்டிருக்கிறது.
அரசின் நலத்திட்டங்கள் உடனுக்குடன் மக்களை சென்றடைய வேண்டும், குறிப்பாக ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பது தான் நமது திரவிட மாடல் அரசின் லட்சியம் ஆகும்.
பெண்ணுரிமை குறித்து பெரியார் கண்ட கனவுகளுக்கெல்லாம் நமது திராவிட மாடல் அரசு செயல்வடிவம் கொடுத்து வருகிறது. கலைஞரை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகளை செய்து வருகின்றார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.