பட்டியலின பெண் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கான வீடு ஆணை, புதியதாக வீடு கட்டிக்கொள்ள விரும்பியவர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்,வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன்,மேயர் சுஜாதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் பங்கு தொகை செலுத்திய 30 பேருக்கும், புதிதாக வீடு கட்டிக் கொள்ள உள்ள 104 பேருக்கும் ஆணைகள் வழங்கினார்.
பின்னர் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன கேமரா கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், ஹெல்மட் அணிவது மிகவும் அவசியமானது .100ல் 80 பேர் ஹெல்மெட் அணிவது இல்லை. பெரும்பாலானோர் செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுகின்றனர்.
சென்னையில் வாகன ஓட்டிகள் அதிகளவில் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஹெல்மெட் அணியவேண்டும். ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் மேலும் பட்டியலின பெண் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவித்தால் தனிப்பட்ட முறையில் நான் அதை வரவேற்கிறேன் என்றார்.
மேலும் காட்பாடியில் எம்ஜிஆருக்கு அதிமுகவை சேர்ந்த ஒருவர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளார். குஷ்புவுக்கு கோவில் கட்டும்போது எம்ஜிஆருக்கு கோவில் கட்டுவது பரவாயில்லை எனவும் திராவிட கொள்கைகளை உண்மையிலே கடைபிடிக்கும் கட்சியாக திமுக மட்டுமே உள்ளது என கூறினார்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.