வட இந்தியர்கள் வாழ்வதிலும் பணியாற்றுவதிலும் பிரச்சனை இல்லை என்றும், நாளை குடியுரிமை பெற்று அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் திருப்பூர் யூனியன் மில் சாலையில் தற்சார்பு பொருளாதாரம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, மேடையில் பேசிய அவர் சிலிண்டருக்கு 200 ரூபாய் குறைக்கப்பட்டது தேர்தலை கருத்தில் கொண்டு எனவும், தேர்தல் முடிந்தவுடன் சந்திராயன் போல சிலிண்டர் விலை உயரும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதனை மக்கள் நம்பி விட வேண்டாம் எத்தனை முறை தோற்றாலும், நான்தான் முதல்வன் தமிழகத்தில் விவசாயிகளுக்கானாலும் தொழிலாளர்களுக்கானாலும் எந்த ஒரு பிரச்சனையானாலும் நான் முன் நின்று போராடுகிறேன். அதுவே எனக்கு மன நிறைவை தருகிறது. நம்மை ஏமாற்றுபவர்களுக்கு எல்லாம் வாய்ப்பளித்த மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பளித்து பாருங்கள். ஐந்து வருட கால ஆட்சி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.
உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வோம். கார் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வோம். மாறாக தற்போது கார் உள்ளிட்ட பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உணவுப் பொருட்களை மற்ற நாடுகளிடம் கையேந்தி காத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
சீமான் எப்போதும் தனித்து நிற்பதில்லை. எட்டு கோடி மக்களின் பெரும் ஆதரவோடு தேர்தலை சந்தித்து வருகிறேன். தேர்தல் நேரத்தில் இன்னும் பல வாக்குறுதிகள் அளிக்கலாம். அதை நம்பி ஏமாந்து விடாதீர்கள். வட இந்தியர்கள் இங்கு வாழ்வதிலும், பணியாற்றுவதிலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் அவர்கள் குடியுரிமை பெற்று இங்கு அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் நிலைக்கு வருவது பிரச்சனை தான். சொந்த மண்ணிலேயே நாம் அடிமையாக்கப்படுகிறோம், என பேசினார்.
பொதுக் கூட்டத்தின் நிறைவாக திருப்பூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் இளைஞரணி சார்பாக சீமானுக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது.
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
குட் பேட் அக்லி என்ன கதை அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின்…
கங்குவா படத்தை போல் மாற்றி விடாதீர்கள்.! தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள்…
This website uses cookies.