மதுரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத திமுக, புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்த போகின்றனர் என மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை மானியக்கோரிக்கை விவாத நிழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், சட்டப்பேரவை நிறைவடைந்து தேனி மாவட்டத்திற்கு செல்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
தொடர்ந்து விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதில் சிக்கல் என நிதியமைச்சர் பேசியது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் பதிலளித்ததாவது :- தேர்தல் வாக்குறுதியில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்த நிலையில், அதிலிருந்து திமுக நழுவிக்கொண்டுள்ளனர். பழைய ஒய்வூதிய திட்டம் குறித்து திமுகவிடம் தான் கருத்து கேட்க வேண்டும், எனக் கூறினார்.
தொடர்ந்து, மானியக்கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்களை திமுக நடைமுறைப்படுத்துமா என்ற கேள்விக்கு, “ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு புதிய திட்டங்களை எவ்வாறு செயல்படுத்தப்போகிறது,” எனக் கூறினார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.