ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு தேர்தல் விதிகளை மீறி பணம் கொடுத்ததாக ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நாடாளுன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவரை எதிர்த்து இந்தியன் முஸ்லீம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியில் உள்ளனர். இருப்பினும், ஓ.பன்னீர்செல்வம் எனும் பெயரில் 6 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியுள்ள நடந்த பாஜக கூட்டணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் வருகை புரிந்துள்ளார்.
அப்போது, சில பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது, அவர்களுக்கு ஓபிஎஸ் தனது பாக்கெட்டில் இருந்து ரூ.1000 எடுத்து கொடுத்துள்ளார். தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் விதமாக இருப்பதால், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக உள்ளிட்ட கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
வெறித்தனமான டிரைலர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வெண்ட் என்ற தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை சரி…
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக இன்று வரை பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகள் நீடித்து வருகின்றன. 2019ஆம்…
இயக்குனர் டூ காமெடி நடிகர் அஜித்தின் “ரெட்”, சூர்யாவின் “மாயாவி” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சிங்கம்புலி. எனினும் இத்திரைப்படங்களை தொடர்ந்து…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மெட்டாலா ஆஞ்சநேயர் கோவிலானது அமைந்துள்ளது. கோவிலில் இன்று…
This website uses cookies.