அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு போட்டியாக, கட்சி நிர்வாகிகளை அறிவித்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகின்றனர். இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தனது பலத்தை நிரூபிக்கும் விதமாக, அண்மையில் திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்தினார். இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 20ம் தேதி பிரமாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அதேவேளையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஓ.பன்னீர்செல்வம் தனது பக்கம் இழுத்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரக் கூடிய சூழலில், அடுத்தகட்ட நகர்வினை முன்னெடுத்து செல்கிறார்.
இதன் ஒருபகுதியாக, ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ள தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பின்னர் சிறிது நேரம் ஓ.பன்னீர்செல்வம் தனியாக தனது அணியை சேர்ந்த நிர்வாகிகளுடன் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி பழனிசாமி மதுரையில் மாநாடு நடத்தும் நிலையில், அவருக்கு போட்டியாக கொங்கு மண்டலமான சேலம் அல்லது கோவையில் மிகப்பிரமாண்ட அளவில் மாநாடு ஒன்றை நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து முன்மொழியப்பட்டது. அதன்படி சேலத்தில் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- எடப்பாடி பழனிசாமியுடன் இனி இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருமுறை இணைந்தற்கான நமக்குக் கற்பித்து விட்டனர். கொங்கு மண்டல மாநாடு உறுதியாக நடைபெறும். விரைவில் தேதி அறிவிக்கப்படும். கூட்டணி தொடர்பாக பாஜகவினர் எங்களுடன் பேசி வருகிறார்கள். அமைச்சரை பதவியில் இருந்து நீக்க அதிகாரம் உள்ளதா..? இல்லையா..? என்பது ஆளுநருக்கே தெரியவில்லை. ஆளுநரின் நடவடிக்கை சரியானது இல்ல என்று மத்திய அரசே சொல்லிவிட்டது, என்றார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.