வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன் என்றும், சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமானத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வருகின்ற 20ஆம் தேதி தாக்கல் ஆக உள்ளது. தாக்கல் செய்த பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன், எனக் கூறினார்.
டிடிவி தினகரன் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு? வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன். சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன், என தெரிவித்தார்.
அதிமுக புதிய உறுப்பினர் அட்டை மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு?, ஆரம்பத்தில் இருந்தே அவருடைய நடவடிக்கைகள் இன்று வரை சட்ட நீதிக்கு புறம்பானதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.
நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் புத்தி இல்லாதவர்கள், என்று சைகையில் பதில் அளித்தார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.