வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன் என்றும், சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளதாக மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை செல்வதற்காக மதுரை விமானத்திற்கு வருகை தந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்த கேள்விக்கு, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை வருகின்ற 20ஆம் தேதி தாக்கல் ஆக உள்ளது. தாக்கல் செய்த பின் எனது கருத்தை தெரிவிக்கிறேன், எனக் கூறினார்.
டிடிவி தினகரன் சசிகலா சந்திப்பு குறித்த கேள்விக்கு? வாய்ப்பு இருந்தால் டிடிவி தினகரனுடன் பயணிப்பேன். சசிகலாவை கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன், என தெரிவித்தார்.
அதிமுக புதிய உறுப்பினர் அட்டை மற்றும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்கு?, ஆரம்பத்தில் இருந்தே அவருடைய நடவடிக்கைகள் இன்று வரை சட்ட நீதிக்கு புறம்பானதாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் தெரியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.
நீதிமன்றத்தில் பொதுக்குழு தொடர்பான தீர்ப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், நாங்கள் மக்கள் தீர்ப்பை எதிர்கொண்டு சென்று கொண்டிருக்கிறோம் கூடிய விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் புத்தி இல்லாதவர்கள், என்று சைகையில் பதில் அளித்தார்.
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
This website uses cookies.