எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள்(அதிமுக எம்.எல்.ஏக்கள்) ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நடப்பு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. வருகிற 13ம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடக்க இருக்கிறது.
இந்த கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏக்களின் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து மூத்த எம்.எல்.ஏக்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் தற்போது தமிழ்நாட்டில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வாறு முறையிட வேண்டும் என்றும் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் என்னென்ன என்பது குறித்து இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவை மீண்டும் சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
நாளை காலை 9.15 மணியளவில் வேலுமணி உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளி வந்ததும்…
ஸ்ருதிஹாசனின் பிரேக்கப் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாகவே மைக்கேல் கோர்சேல் என்ற இத்தாலியரை காதலித்து வந்தார். இருவரும் லிவ்…
This website uses cookies.