சென்னை : குடியரசுத்தலைவர் தேர்தலில் வாக்கு செலுத்த வந்த ஓ.பி.எஸ். பாதியிலேயே திரும்பிச் சென்றார்.
இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.
இதையடுத்து பாஜகவின் வேட்பாளராக திரௌபதி முர்மு, எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ் அவர்கள் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க சென்றார். அப்போது கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மாலை 4 மணிக்கு மேல் பி.பி.இ கிட் உடன் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததை அடுத்து, போர் நினைவுச் சின்னம் அருகே திரும்பிச் சென்றார்.
பின்னர் 4 மணிக்கு மேல் பிபிஇ கிட்டுடன் வந்து வாக்களித்தார். இதே போல கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசரும் பிபிஇ கிட் அணிந்து தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.